ஐ.பி.எல்.(IPL)
சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது: பிசிசிஐ
- ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
- சின்னசாமி மைதானத்திலும் பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.
இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆர்.சி.பி.யின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக திட்டமிட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.