கிரிக்கெட் (Cricket)
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ரிஷப் பண்ட் இடம் பிடித்தார்
- இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டது.
- விக்கெட் கீப்பருடன், துணைக் கேப்டன் பதவியையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த அணி விவரம்:-
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.