கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 பந்துகளில் retd hurt ஆன கேப்டன் கில்

Published On 2025-11-15 11:28 IST   |   Update On 2025-11-15 11:28:00 IST
  • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது.
  • வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா:

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். 26.1 ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.

29 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 3 பந்தை ஸ்விப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். அப்போது அவருக்கு கழுத்து வலி  ஏற்பட்டது. அணி மருத்துவர் வந்து சோதனை செய்த போதும் அவரால் வலி தாங்க முடியவில்லை. இதனால் அவர் retd hurt ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

Tags:    

Similar News