கிரிக்கெட் (Cricket)

அறிமுகமான நிலையில் சாய் சுதர்சனுக்கு வந்த சோதனை..! 2ஆவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்

Published On 2025-06-25 20:18 IST   |   Update On 2025-06-25 20:18:00 IST
  • முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
  • 5ஆவது நாள் பீல்டிங் செய்தபோது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் சரியாகிவிட்டால், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News