24 மணி நேரம் காத்திருங்கள்: பாகிஸ்தான் போட்டி குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் அளித்த பதில்..!
- நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம்.
- அதன்பின் கைக்குலுக்குவது குறித்து முடிவு செய்வோம்.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
இந்த போட்டியில் இருஅணி வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?. வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்வார்களா? போன்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
கொழும்பில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து சூர்யகுமார் பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சூர்யகுமார் யாதவ் அளித்த பதில் பின்வருமாறு:-
24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள். நன்றாக சாப்பிடுங்கள். 24 மணி நேரம் காத்திருங்கள்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
மேலும், நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்றார்.