ரோகித் சர்மா தலைமையில் 2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி அறிவிப்பு
- இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), பில் சால்ட்(இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).