கிரிக்கெட் (Cricket)

ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருப்பது அணிக்கு கூடுதல் பலம்- கவுதம் கம்பீர்

Published On 2025-11-11 16:59 IST   |   Update On 2025-11-11 16:59:00 IST
  • ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம்.
  • கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும் அதன்பிறகு ஒருநாள், டி20 தொடரும் நடக்கவுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம். கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போதைய இந்திய அணியில் அதற்கும் மேல் உள்ளனர்.

ஆசிய கோப்பையில் பும்ராவை முதல் 3 ஓவர்கள் வீச செய்தது நல்ல பலன் தந்ததால், பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.

Tags:    

Similar News