இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2வது இன்னிங்சில் 63 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா
- இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா மட்டும் ஆட்டமிழ்க்காமல் 29 ரன்கள் அடித்து தனி ஒருவராக போராடி வருகிறார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.