கிரிக்கெட் (Cricket)
null

களத்தில் எங்களுக்கு இடையேயான சண்டையை மிஸ் செய்வேன்- கோலி குறித்து ரூட் நெகிழ்ச்சி

Published On 2025-06-18 18:01 IST   |   Update On 2025-06-18 18:52:00 IST
  • விராட் கோலியை பார்த்து வியந்துள்ளேன்.
  • சிலரின் ஓய்வு சிலருக்கு வாய்ப்புகளை கொடுக்கும்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்தார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20-ந்தேதி) லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை போட்டியாளராக நினைத்ததில்லை என இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

விராட் கோலியை நான் எப்போதுமே போட்டியாளராக நினைத்ததில்லை. அவரை பார்த்து வியந்துள்ளேன். களத்தில் எங்களுக்கு இடையே இருக்கும் சண்டையை நான் எப்போதுமே மிஸ் செய்வேன். ஆனால் சிலரின் ஓய்வு சிலருக்கு வாய்ப்புகளை கொடுக்கும்.

என ஜோ ரூட் கூறினார். 

Tags:    

Similar News