அபிஷேக் சர்மா வாணவேடிக்கை, ரிங்கு சிங் கேமியோ: நியூசிலாந்துக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- அபிஷேக் சர்மா 35 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 5 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விகெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது ஓவரை பிலிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்தியா 8.4 ஓவரிலேயே 100 ரன்னைத் தொட்டது
அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 35 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 12 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ஷிவம் துபே 9 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஹரிக் பாண்ட்யா உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார்.
ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 15.4 ஓவரில் 185 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். 17.2 ஓவரில் இந்தியா 200 ரன்களை தாண்டியது.
அக்சர் படேல் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களம் இறங்கினார். கடைசி ஓவரில் ரிங்கி சிங் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்துள்ளது. ரிங்கு சிங் 20 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.