கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ

Published On 2025-05-08 00:42 IST   |   Update On 2025-05-08 00:42:00 IST
  • இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4,301 ரன் அடித்தார்.
  • இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

புதுடெல்லி:

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பிசிசிஐ தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நன்றி கேப்டன், வெள்ளைப் பந்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து வழிநடத்துவார். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம் என பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News