கிரிக்கெட் (Cricket)

18வது ஐ.பி.எல் தொடர் - தோனி சென்னை வருகை

Published On 2025-02-26 17:13 IST   |   Update On 2025-02-26 17:48:00 IST
  • மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
  • ஐ.பி.எல்.ல் தோனி தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பைகளை வென்றது.

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார்.

ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது.

இந்நிலையில், மார்ச் 22ம் தேதி 2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

மார்ச் 23ம் தேதி சென்னை- மும்பை அணிகள் மோத உள்ள நிலையில் பயிற்சியை தொடங்குவதற்காக தோனி சென்னை வந்துள்ளார்.

இதனால், தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News