விளையாட்டு
9-வது முறையாக கோப்பையை வென்றது சீனா

பெண்களுக்கான ஆசிய கால்பந்து: 9-வது முறையாக கோப்பையை வென்றது சீனா

Published On 2022-02-07 09:57 IST   |   Update On 2022-02-07 09:57:00 IST
பெண்களுக்கான ஆசிய கால்பந்து போட்டியில் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
மும்பை:

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் நவிமும்பையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா- தென்கொரியா அணிகள் மல்லுகட்டின. 

விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் தென்கொரியா 2 கோல்கள் அடிக்க, பிற்பாதியில் எழுச்சி பெற்ற சீனா 68 மற்றும் 72-வது நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணியினரும் வரிந்து கட்டி நின்றனர். 

கடைசி நிமிடத்தில் சீனாவின் ஸியாவ் யுஸ் கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவின் கனவை தகர்த்து 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சீனா கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்த கோப்பையை வென்று இருந்தது. 

இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் பல வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Similar News