விளையாட்டு
5 விக்கெட் வீழ்த்திய ராஜ்பவா

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 189 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து- சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

Published On 2022-02-05 22:10 IST   |   Update On 2022-02-05 22:10:00 IST
ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் சிக்கித் தவித்த இங்கிலாந்து 44.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.


4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார்

4-வது வீரராக களம் இறங்கிய ஜேம்ஸ் ரிவ் சிறப்பாக விளையாடி 116 பந்தில் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்கள் அடித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ராஜ் பவா சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 9 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுதது 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

Similar News