செய்திகள்
ஜோப்ரா ஆர்ச்சர்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

Published On 2021-02-11 18:47 GMT   |   Update On 2021-02-11 18:47 GMT
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வலது முழங்கையில் ஊசி போடப்பட்டுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News