செய்திகள்
மேக்ஸ்வெல் - கேஎல் ராகுல்

பேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்

Published On 2020-11-28 14:22 GMT   |   Update On 2020-11-28 14:22 GMT
பேட்டிங் செய்யும் போது கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது. 

சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் போன்றோர் சாடியிருந்தனர். 

இந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கேஎல் ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரி விட்டதாக கூறி ஸ்மைலி-யையும் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News