செய்திகள்
பிரதமர் மோடி - விராட் கோலி

கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ‘யோ-யோ’ பயிற்சி குறித்து கோலியிடம் பிரதமர் கேட்டறிந்தார்

Published On 2020-09-25 08:19 GMT   |   Update On 2020-09-25 08:19 GMT
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ‘யோ-யோ’ பயிற்சி குறித்து விராட் கோலியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடெல்லி:

அனைவரும் உடற்பயிற்சி பெற ஊக்குவிக்கும் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

இதையொட்டி, காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி பங்கேற்று வீரர்களுடன் பேசினார்.

அப்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ‘யோ-யோ’ பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்தேன். கேப்டனும் இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டுமா? எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கோலி, “வீரர்களுக்கான உடல் தகுதிக்கு இந்த தேர்வு மிகவும் முக்கியமானது. உலக தரத்திலான பயிற்சியை ஒப்பிடும் போது நமது அணியின் உடற்பயிற்சி குறைவாகவே இருக்கும். இதை ‘யோ-யோ’ பயிற்சி மூலம் அதிகரிக்கிறோம்” என்று கூறினார்.

இது தவிர, ஓட்டப் பந்தய பயிற்சி குறித்தும் பிரதமரிடம் கோலி விரிவாக எடுத்து கூறினார். அப்போது இது போன்ற பயிற்சிகளில் தோல்வி அடைந்தால் என்னால் கூட இந்திய அணியில் இடம் பெற முடியாது. இதுதான் அனைவரையும், அனைத்து வகையிலும் உடலை வலுவாக வைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.

உடல் வலிமையுடன் இருந்தால்தான் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தேவேந்திர ஜாஜாரியா, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை அப்ரான் ஆஷிக், மாரத்தான் வீரர் மலிந்த் சோமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News