செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி- காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2018-08-25 09:38 GMT   |   Update On 2018-08-25 09:38 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார். #AsianGames2018 #PVSindhu
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியாவை எதிர்கொண்டார். . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-12, 21-15 என்ற நேர்செட்களில் பிவி சிந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 34 நிமிடங்களில் போட்டியை முடித்துள்ளார் சிந்து.

முன்னதாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் சென் கிங்சென்- ஜியா இபான் ஜோடியிடம் 11-21, 22-24 என தோல்வியடைந்தது. #AsianGames2018 #PVSindhu
Tags:    

Similar News