இந்தியா
null

எல்.கே.அத்வானி ஜின்னாவை பாராட்டினார் - திரித்து பேசுவதில் மாஸ்டரான மோடி இதற்கு பதில் சொல்வாரா? - காங்கிரஸ்

Published On 2025-12-08 23:52 IST   |   Update On 2025-12-08 23:53:00 IST
  • திரித்துக் கூறுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..
  • 2005-ஆம் ஆண்டு கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை

பாராளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது ஜவஹர்லால் நேரு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில்,நேரு திருப்திப்படுத்தும் அரசியல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், திரித்து பேசுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..

1940 மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்த நபருடன் எந்த இந்தியத் தலைவர் கூட்டணி அமைத்தார்? அது பாஜகவின் சியாம பிரசாத் முகர்ஜிதான்.

2005 ஜூன் மாதம் கராச்சியில் ஜின்னாவை எந்த இந்தியத் தலைவர் பாராட்டினார்? அது எல்.கே. அத்வானிதான்.

2009-ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்த இந்தியத் தலைவர் யார்? அவர் பாஜகவின் ஜஸ்வந்த் சிங்" என்று பதிவிட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை, "வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர்.

ஆனால், உண்மையில் வரலாற்றை உருவாக்கியவர்கள் மிகச் சிலரே. முகமது அலி ஜின்னா அத்தகைய அரிதானவர்களில் ஒருவர்.

பாகிஸ்தான் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை ஒரு கிளாசிக். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உள்ள ஒரு மதச்சார்பற்ற தேசத்தை அவர் வலியுறுத்தினார்" என்று எழுதியிருந்தார். 

Tags:    

Similar News