செய்திகள்

தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றுள்ளோம் - பிராவோ

Published On 2018-05-28 12:52 GMT   |   Update On 2018-05-28 12:52 GMT
தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றோம், இந்த வெற்றியை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார். #IPL2018
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பானது. இது ஒரு சிறப்பான சூழ்நிலை. நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து விளையாடியது கிடையாது.



ஒரு போட்டிக்குப் பின்னர் நாங்கள் சென்னையில் இருந்து புனேவிற்குச் சென்றோம். பெரும்பாலான வீரர்களுக்கு இது முதல்முறை. நாங்கள் போட்டியின்மீது கவனம் செலுத்தி, அதை செய்தோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை விட சிறந்தது ஏதும் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News