இந்தியா

கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற யூடியூபர் மனைவி.. காதலன் உதவியுடன் நடந்த கொடூரம்

Published On 2025-04-16 12:32 IST   |   Update On 2025-04-16 14:56:00 IST
  • அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.
  • 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள பிரவீனின் உடல் மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் -இல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரவீனா - சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

கணவன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ரவீனா சுரேஷுடன் இணைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூபில் இயங்கி வந்துள்ளார். அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.

இதற்கிடையே கணவன் பிரவீன், கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரவீனா சுரேஷுடன் அந்தரங்கமான நிலையில் இருப்பதை கண்டுள்ளார். இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின் பைக்கில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள சாக்கடையில் வீசியுள்ளனர்.  மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன்பின் போலீசார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர். பிரவீன் - ரவீனாவின் 6 வயது மகன் அவனது தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளான்.

 

Tags:    

Similar News