இந்தியா

சொகுசு காரில் கால்நடை தீவனத்தை ஏற்றி சென்ற நபர்

Published On 2023-09-09 13:38 IST   |   Update On 2023-09-09 13:38:00 IST
  • அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார்.
  • தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் உலா வந்தாலும் ஒரு சில வீடியோக்கள் அதிகம் பேரால் பகிரப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சொகுசு கார் ஒன்றில் கால்நடைகளுக்கு தீவனத்தை ஏற்றி செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார். காரின் மேல்புறம் அவற்றை ஏற்றிக் கொண்டு, அந்த தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.

இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலானதையடுத்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News