இந்தியா

உத்தரபிரதேசம் வன்முறை... சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும்-ராகுல்காந்தி

Published On 2024-11-25 13:11 IST   |   Update On 2024-11-25 13:16:00 IST
  • மாநில அரசின் ஒருபக்க சார்பும் நடவடிக்கைகளும் துரதிர்ஷ்டவசமானது.
  • ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் வன்முறை குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்கவே பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல. இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News