இந்தியா

பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்தேன்.. ZOMATO சி.இ.ஓ தீபிந்தருக்கு ஓபனாக கடிதம் எழுதிய நபர்

Published On 2024-12-17 15:59 IST   |   Update On 2024-12-17 15:59:00 IST
  • கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் இதை செய்தேன்
  • பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி ஒரு மரத்தின் அருகில் சென்றேன்.

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாடோ [ZOMATO] ஏற்பாடு செய்த பிரையன் ஆடம்ஸ் கச்சேரி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழிவறை வசதி இல்லாததால் தனது கால் சட்டையிலேயே சிறுநீர் கழித்ததாக நீரழிவு நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ZOMATO சிஇஓ தீபிந்தர் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ தனது கடிதத்தில், பிரையன் ஆடம்ஸ் கச்சேரியில் சிறுநீர் கழிக்கதான் நான் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினேன் போலும்.

 

பாம்பே கன்வென்ஷன் & எக்ஸிபிஷன் சென்டரின் குளிரூட்டப்பட்ட அரை எனக்கு சிறுநீரை வரவழைத்தது. அதற்காக நீண்ட அரிசில் கழிவறைக்கு முன் காத்துக்கிடந்தேன். ஆனால் வரிசை நகர்வதாக இல்லை. மற்றொரு வரிசைக்கு மாறினேன்.

ஆனால் அதுவே OTHER CATAGORY கழிவறை, எனவே அங்கு நான் செல்ல முடியாது. எனவே கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் பாதுகாப்பு அதிகாரிகளை நைசாக தாண்டி ஒரு மரத்தின் அருகில் எனது அவஸ்த்தையை இறக்கி வைத்தேன்.

ஆனால் அதற்கு முன்னதாகவே எனது சிறுநீர் பேண்டில் இறங்கி விட்டது. நான் ஒரு சர்க்கரை நோயாளி, எனவே இதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை,1000 விருந்தினர்களுக்கு மொத்தமே அங்கு 3 கழிவறைகள் ஒதுக்கிய நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்  என்று அவர் தனது திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

Tags:    

Similar News