இந்தியா

சிராக் பஸ்வானுடன் கூட்டணி: அதிருப்தியால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் பசுபதி பராஸ்

Published On 2024-03-19 06:34 GMT   |   Update On 2024-03-19 06:41 GMT
  • ராம் விலாஸ் பஸ்வான் கட்சியை பிரித்து பசுபதி பராஸ் தனியாக செயல்பட்டார்.
  • ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனால் மத்திய மந்திரியாக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலின்போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. அவர் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பதவியும் வழங்கியது.

ஆனால், தற்போதைய தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில் "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News