இந்தியா

உத்தவ் தாக்கரே

சிவசேனாவை முடிக்க சதி செய்யும் பாஜக - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2022-07-04 13:54 GMT   |   Update On 2022-07-04 13:54 GMT
  • அரசியல் விளையாட்டிற்கு பதிலாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
  • சட்டசபையை தன்னிச்சையாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல்.

மும்பை:

மகாராஷ்டிர சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனா தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சிவசேனா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

சட்டசபையை தன்னிச்சையாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். சிவசேனா கட்சியை முடிவுக்குக் கொண்டு வர பாஜக சதி செய்கிறது. இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுவதற்கு பதிலாக, அவர்களுக்கு தைரியம் இருந்தால் மாநிலத்தில் இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும்.

நாங்கள் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். நாங்கள் தவறு செய்தால், மாநில மக்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள், நீங்கள் (ஷிண்டே குழுவினர் ) தவறாக இருந்தால், மக்கள் உங்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்

மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா அல்லது அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News