காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சர்மிளா பஸ் யாத்திரை மூலம் பிரசாரம்
- மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
- ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சொந்த தொகுதியான கடப்பா மாவட்டத்தில் பஸ் யாத்திரை மூலம் பிரசாரத்தை தொடங்கினார். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதுகுறித்து சர்மிளா எனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
எனது தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.
கடவுளின் ஆசியோடும் தந்தையின் ஆசியோடும் தாயின் அன்போடும் மகனின் கடைசி ஆசைப்படி பிரசாரத்திற்கு செல்கிறேன். நீதிக்காக போராடும் எனக்கு ஆந்திர மக்களின் ஆசி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துங்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது முதல் தனது சகோதரரான முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போது அவரது பாணியிலேயே பஸ் யாத்திரையாக செல்லும் சர்மிளா, ஜெகன் மோகன் அரசையும் அவரது செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.