ஆந்திராவில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
- பலாத்கார வீடியோவை நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர்.
- மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாண் துர்க் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் நேற்று அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 5 பேர் என்னை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டினர். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர்.
பலாத்கார வீடியோவை அவரது நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர். அவரும் வீடியோவை காட்டி என்னை வரவழைத்து பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து கல்யாண் துர்க் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இதுகுறித்து டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.