இந்தியா

'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக புகார்

Published On 2023-05-06 11:59 IST   |   Update On 2023-05-06 11:59:00 IST
  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.
  • பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

டேராடூன்:

பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன் கி பாத்) 100-வது நிகழ்ச்சி கடந்த 30-ந்தேதி நடந்தது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

அதே நேரம் இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என டேராடூனின் ஜி.ஆர்.டி. நிரஞ்சன் பூர் அகடாமி உத்தரவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் உரிமைக்கான தேசிய சங்கத்தில் தேசிய தலைவர் ஆரிப்கான் டேராடூன் முதன்மை கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News