இந்தியா

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு- ராகுல் நாளை மணிப்பூர் செல்கிறார்

Published On 2023-06-28 05:01 GMT   |   Update On 2023-06-28 05:17 GMT
  • 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.
  • நாளை மற்றும் 30-ந்தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

புதுடெல்லி:

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

இந்த நிலையில் அந்த கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

நாளை மற்றும் 30-ந்தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கி உள்ளவர்களை சந்திக்கும் ராகுல், அம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News