இந்தியா

கள்ளக்காதலனுடன் ஓட்டம்.. மனைவியை பழிதீர்க்க கணவர் செய்த வினோத திருமணம்

Published On 2023-03-04 05:30 GMT   |   Update On 2023-03-04 07:57 GMT
  • சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர்.

மனிதர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி தீர்க்க கோபத்தின் உச்சத்தில் ஏதேதோ செய்வார்கள். ஆனால், பீகாரில் ஒருவர் காதலனுடன் ஓடிச்சென்ற மனைவியை பழி தீர்க்க வினோத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீரஜூக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய ரூபி தனது கள்ளக்காதலன் முகேஷூடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நீரஜ், தனது மனைவியை முகேஷ் கடத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

மேலும், இந்த விஷயத்திற்கு முடிவுகட்ட நீரஜ் பஞ்சாயத்தை கூட்டினார். ஆனால், பஞ்சாயத்திற்கு இணங்க மறுத்த முகேஷ், ரூபியுடன் அன்றே ஊறைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், மனைவி ரூபியை பழிவாங்குவதற்காக, முகேஷின் மனைவியான அதே பெயரைக் கொண்ட ரூபி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர். முகேஷூக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த வினோதமான திருமணங்கள் பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News