இந்தியா

மனைவி நடத்தையில் சந்தேகம்: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தை தற்கொலை

Published On 2023-10-07 11:06 IST   |   Update On 2023-10-07 11:06:00 IST
  • வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயவாடா, பாப்டிஸ்ட் பாம் பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவரது மனைவி பவானி. தம்பதியின் 2 மகள்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட முரளி கிருஷ்ணா பவானியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பவானியை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவானி வீட்டில் இருந்து தெருவில் ஓடினார். மனைவியை விடாமல் துரத்தி சென்ற முரளி கிருஷ்ணா அவரை சரமாரியாக வெட்டினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.

இதில் இளைய மகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனைக் கண்ட முரளி கிருஷ்ணா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் பவானி மற்றும் மூத்த மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு முரளி கிருஷ்ணா மற்றும் அவரது இளைய மகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News