இந்தியா

ராமர் பெயரில் பூஜை... பா.ஜ.க. சார்பில் ரிட் மனு தாக்கல்

Published On 2024-01-22 04:09 GMT   |   Update On 2024-01-22 05:34 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
  • பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று காலை 10.30 மணிக்கு முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News