இந்தியா

ஜம்மு காஷ்மீர் ரம்பனில் சாலை விபத்து- 4 பேர் உயிரிழப்பு

Published On 2022-07-24 13:43 GMT   |   Update On 2022-07-24 13:43 GMT
  • ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
  • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பயணித்த வாகனம் சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் ஜாஹிதா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது, ஹசா பேகம் மற்றும் அப்துல் ரஷீத் என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஷகன் ராம்சூவைச் சேர்ந்த ஷானாசா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது ஆகிய இருவர் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News