துரோகம் செய்வதாக சந்தேகம்.. நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் - பெங்களூருவில் கோரம்
- இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
- சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மனைவியை மக்கள் முன்னிலையில் கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி கிருஷ்ணப்பா (43 வயது). இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சாரதா வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் கிருஷ்ணப்பா காத்திருந்தார். அவர் வந்ததும், சாலையில் வைத்தே தனது மனைவியின் கழுத்தை கிருஷ்ணப்பா அறுத்து கொலை செய்தார்.
சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து ஓட முயன்ற அவரை பிடித்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் சாரதாவின் உடலை மீட்டு, கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.