இந்தியா

சில சமயம் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்.. சர்ச்சைப் பேச்சு பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்!

Published On 2025-06-15 15:43 IST   |   Update On 2025-06-15 15:43:00 IST
  • இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
  • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், சில சமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் அமித் ஷா அட்வைஸ் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கான பயிற்சி முகாமில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

"தவறுகள் நடக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழக்கூடாது. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு மாணவரைப் போல இருக்க வேண்டும்" என்று அமித் ஷா நினைவுபடுத்தினார்.

Tags:    

Similar News