இந்தியா
ஆந்திராவில் கோர விபத்து.. பேருந்து மீது சிமெண்டு லாரி மோதியதில் 6 பேர் பலி
- விபத்து குறித்து புள்ளம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்கவாட்டில் இருந்து அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி பேருந்து மீது மோதியது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் இன்று மாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
கடப்பாவில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அன்னமயா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே சென்றபோது, பக்கவாட்டில் இருந்து அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது. மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்தது.
பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ராஜம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து புள்ளம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.