இந்தியா

கல்வி தகுதியை பிரதமர் மோடி மறைக்கும் மர்மம் என்ன?: சஞ்சய் ராவத் கேள்வி

Published On 2023-04-04 02:15 GMT   |   Update On 2023-04-04 02:15 GMT
  • பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை புதிய பாராளுமன்ற நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.
  • பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மும்பை :

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டமேற்படிப்பு படித்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புரட்சிகரமானது. பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை அவர் கட்டிய புதிய பாராளுமன்ற பிரதான நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும். அவரது கல்வி தகுதியை பாராளுமன்றமும், நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மர்மம் என்ன?. இதை ஏன் மறைக்க வேண்டும்?.

பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News