இந்தியா

உ.பி.யில் சொகுசு கார்- பள்ளி வாகனம் நேருக்குநேர் மோதல்: 6 பேர் உயிரிழப்பு

Published On 2023-07-11 09:50 GMT   |   Update On 2023-07-11 09:50 GMT
  • எக்ஸ்பிரஸ் சாலையில் பள்ளி வாகனம ஒன்வே-யில் தவறாக வந்ததால் விபத்து
  • உயிரிழந்த அனைவரும் சொகுசு காரில் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின் மீது தவறான திசையில் வந்த பேருந்து நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த கார் குர்கானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியான 6 பேரும் அந்த காரில் பயணித்தவர்கள். பள்ளி பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணையில் பள்ளி வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 9 கி.மீ. தூரம் தவறான பாதையிலேயே பயணித்தது தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க காரின் கதவுகளை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு பள்ளி வாகனம் சொகுசு கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News