இந்தியா

தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்

Published On 2024-04-16 11:47 GMT   |   Update On 2024-04-16 11:47 GMT
  • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.
  • தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது என அக்கட்சி புகார் அளித்துள்ளது.

புதுடெல்லி:

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News