இந்தியா

கோப்புபடம்.

அரியானாவில் டிராக்டர் விபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Published On 2023-11-24 07:49 GMT   |   Update On 2023-11-24 07:49 GMT
  • பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது
  • டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சண்டிகர்:

பஞ்சாபிலிருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பட்ரான் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News