என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா விபத்து"

    • பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது
    • டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாபிலிருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

    டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பட்ரான் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை.

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் புடானா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்தார்.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புடானாவில் உள்ள சூளையில் வேலை செய்து வருகின்றனர். செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் தற்போது நடந்து வருகிறது.

    இதனிடையே நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாதங்களே ஆன நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை. 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×