மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மரியாதை செலுத்தினார்.
மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரத்தன் டாடாவை நினைவு கூர்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “இன்று முழு நாட்டிற்கும் சோகமான நாள், இந்தியாவின் உண்மையான மகன் ரத்தன் டாடா நம்மிடையே இல்லை... அவரது வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து பாஜக எம்பியும், நடிகருமான ரவி கிஷன் கூறுகையில், ரத்தன் டாடா ஜியைப் போன்ற வலிமையான குணம் கொண்டவர்கள் மிகக் குறைவு. அவர் தொலைநோக்கு பார்வையுடையவர் மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார் என தெரிவித்துள்ளார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆத்தியா தாக்கரே, அனில் தேசாய் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோருடன் வந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு இஷா அம்பானி தனது கணவருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.