காங்கிரஸ் பயிற்சி முகாம் கூட்டத்திற்கு தாமதம்- தண்டால் எடுத்த ராகுல் காந்தி
- முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
- கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.
மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
இதை பார்த்த சச்சின் ராவ் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் கூட்டத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு. அப்போதுதான் கட்சி தொண்டர்களும் ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி சொன்னார்.
நேராக தனது சீட்டில் உட்கார சென்ற ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என்று சொல்லி சச்சின் ராவ் மீண்டும் சிரித்தார்.
தலைவர் சொன்னதை கேட்ட ராகுல் காந்தி கூட்டத்தின் நடுவே தண்டால் எடுத்தார். இதை பார்த்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கைதட்டி உற்சாபடுத்தி ஆரவார கோஷம் எழுப்பினர். இது கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.
மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் தேர்தல் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.