இந்தியா

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்டது: அமித் ஷா

Published On 2025-03-29 15:48 IST   |   Update On 2025-03-29 15:48:00 IST
  • இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது.
  • வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மணிப்பூரில் சரியான நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இயல்பு நிலைக்கு மணிப்பூர் திரும்பி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக கூறியதாவது:-

மணிப்பூரில் தற்போதைய நிலை அமைதியாக உள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. உள்துறை அமைச்சகம் இரண்டு சமூகத்தினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு சமூகத்தினரும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படிப்படியாக நிலைமை நேர்மறையான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது கவலைப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை.

இரண்டு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது வெற்றி பெற்றிருக்காது. மணிப்பூரில் சரியான நேரம் வந்தபோது, நாங்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினோம்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குகி-மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்டது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர்.

மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை எதிர்த்து குகி சமூகத்தினர் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இந்த பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது.

Tags:    

Similar News