இந்தியா

கேரளாவில் T20 ஓவர் போட்டியை நடத்தி இருக்கலாம் - சசி தரூர்

Published On 2025-12-18 11:16 IST   |   Update On 2025-12-18 11:16:00 IST
  • லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
  • கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை.

கடும் பனி மூட்டத்தால் லக்னோவில் நடைபெற இருந்த 20 ஓவர் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள். வட இந்திய நகரங்கள் பெரும்பாலானவற்றில் காற்றின் தர குறியீடு (411) மோசமாக இருந்தது. இது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை. காற்று தரக் குறியீடு திருவனந்தபுரத்தில் சுமார் 68 ஆக உள்ளது. இதனால் அங்கு போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News