இந்தியா

புதிய மைல்கல்.. DRDO-வின் ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றி - வீடியோ

Published On 2026-02-04 00:43 IST   |   Update On 2026-02-04 00:43:00 IST
  • ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
  • DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.

ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.

சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News