இந்தியா

மிகவும் நல்ல செய்தி: இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து

Published On 2026-02-03 17:35 IST   |   Update On 2026-02-03 17:35:00 IST
  • இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.
  • தற்போது அதை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவிற்குள் இந்தியா ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை.

இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார். அதை மீறி வாங்கினால் இதற்கென்று தனியாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

இருந்தபோதிலும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இதனால் மொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்.

இந்த நிலையில்தான் நேற்றிரவு டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கிறேன் என டிரம்ப் அறிவித்தார்.

இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை பாஜக-வினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் "அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவது மிக சிறந்த செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனிமேல் அதிகரிக்கும்" என்றார்.

Tags:    

Similar News