இந்தியா

பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2022-12-07 07:04 GMT   |   Update On 2022-12-07 07:04 GMT
  • குளிர்கால கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற, எம்.பி.க்கள் உதவ வேண்டும்.
  • இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஒத்தி வைக்கப்படும் போது அது புதிய எம்.பி.க்களை பாதிக்கிறது.

அவை நடவடிக்கைகள் தொடராத போதும், விவாதங்கள் நடைபெறாத போதும் கற்றுக் கொள்வதும், புரிந்து கொள்வதும் இயலாமல் போய் விடுகிறது. அதனால்தான் அவை செயல்படுவது மிகவும் முக்கியமானது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட தங்களை விவாதத்தில் பேச விடுவதில்லை என்று புதிய எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.

அவர்களது வலியை புரிந்து கொள்ளுங்கள். அனைத்துத் கட்சித் தலைவர்களும் இதை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News