இந்தியா
'ஆபரேஷன் சிந்தூர்' விவாதத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.
- இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கவுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் எனவும் மாலை பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.